கோடியேரி மகன் சபரிமலையில் இருமுடிகட்டுடன் தரிசனம்

தினமலர்  தினமலர்
கோடியேரி மகன் சபரிமலையில் இருமுடிகட்டுடன் தரிசனம்

சபரிமலை: கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளரின் மகனும், கற்பழிப்பு வழக்கில் சிக்கியவருமான, பினோய் கோடியேரி, சபரிமலையில் இருமுடி கட்டுடன் தரிசனம் செய்தார்.


கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் மகன், பினோய் கோடியேரி, 33. இவர், பீஹாரை சேர்ந்த பெண் கொடுத்த கற்பழிப்பு புகாரில், முன் ஜாமினில் உள்ளார். இவருக்கு நடந்த டி.என்.ஏ. பரிசோதனையின் முடிவு, ஓரிரு நாளில் வர உள்ளது.

இந்நிலையில், பினோய் உட்பட ஏழு பேர், நேற்று முன்தினம் இருமுடி கட்டுடன் சபரிமலை வந்தனர். அப்போது உச்சபூஜை முடிந்து, நடை அடைக்கப்பட்டு விட்டது. இதனால், விருந்தினர் அறையில் தங்கிய அவர், மாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், 18ம் படி வழியாக சென்று தரிசனம் செய்தார். பின், மாளிகைப்புறம் கோவிலிலும் தரிசனம் செய்தார். அவருடன் தேவசம் அதிகாரிகளும் உடன் சென்றனர்.


இதற்கிடையில், அய்யப்பனை விமர்சித்ததன் பலனை கோடியேரி குடும்பம் அனுபவிப்பதாகவும், வழக்கின் பிடி இறுகுவதால், அய்யப்பனிடம் சரணடைய வந்துள்ளதாகவும், சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருகிறது.


மூலக்கதை