விஜய் பட வசனம் பேசி அசத்திய ஷரத்தா கபூர்

தினமலர்  தினமலர்
விஜய் பட வசனம் பேசி அசத்திய ஷரத்தா கபூர்

பிரபல இந்தி திரைப்பட நடிகை ஷரத்தா கபூர், நடிகர் விஜய்யின் 'போக்கிரி' பட டயலாக்கைப் பேசி மாஸ் காட்டியிருக்கிறார். பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான பிரம்மாண்ட தெலுங்கு படமான 'சாஹோ', படத்தை சுஜித் இயக்கி இருக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு, ரிலீசாக இருக்கிறது.

அதேபோல, 'ஆஷிக்கி 2' படத்தின் மூலம் தமிழ் இளைஞர்களை கொள்ளை கொண்டவர் நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகி. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. 'சாஹோ' பட நாயகன் பிரபாசும், 'ஆஷிக்கி '2 பட நாயகி ஷரத்தா கபூரும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை ஷரத்தா கபூர், 'போக்கிரி' படத்தில் விஜய் பேசும் பிரபலமான வசனத்தைப் பேசிக் காட்டினார். 'நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, அதுக்குப் பின்னால என் பேச்சை நானே கேட்க மாட்டேன்' என்ற அந்த வசனத்தை, தன்னுடைய பாணியில் பேசிக் காட்டினார். இது, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு கலகலப்புட்டியது.

மூலக்கதை