மாநகராட்சி பூங்காவில் இசை நீரூற்று, ஒளிக்கதிர்

தினமலர்  தினமலர்
மாநகராட்சி பூங்காவில் இசை நீரூற்று, ஒளிக்கதிர்

மதுரை : மதுரை மாநகராட்சி அலுவலக வளாக சுற்றுச்சூழல் பூங்காவில் (எக்கோ பார்க்) இசையுடன் கூடிய நீருற்று மற்றும் ஒளிக்கதிர் (மியூசிக்கல் பவுண்டேஷன், வாட்டர் ஸ்கிரீன் லேசர் ேஷா) நிகழ்ச்சியை அமைச்சர் செல்லுார் ராஜு துவக்கி வைத்தார்.

இசை நீருற்று, நீர் திரை, லேசர் நிகழ்ச்சி 30 நிமிடம் இடம்பெறும். பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.30 ரூபாய் கட்டணம். ஆக.,21 ல் இருந்து இரவு 7:00- 7:30 மணி, 7:40 - 8:10 வரை காட்சிகள் நடக்கும். ரூ.70 லட்சத்தில் 100 சதவீத தனியார் பங்களிப்புடன் இது அமைக்கப்பட்டுள்ளது. மொத்த வருவாயில் 10 சதவீதம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும்.

கமிஷனர் விசாகன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., நகர் பொறியாளர் அரசு, உதவி நகர் நல அலுவலர் (பொறுப்பு) வினோத்ராஜா, உதவி கமிஷனர் பிரேம்குமார், செயற்பொறியாளர் ராஜேந்திரன் பங்கேற்றனர்.

மூலக்கதை