கார்த்திக் நரேனுக்கு விசேஷ மூளை: பிரியா பவானி சங்கர் கண்டுபிடிப்பு

தினமலர்  தினமலர்
கார்த்திக் நரேனுக்கு விசேஷ மூளை: பிரியா பவானி சங்கர் கண்டுபிடிப்பு

தனது நரகாசுரன் படம் வெளிவராத நிலையில் அடுத்த படமாக மாஃபியாவை பிசியாக இயக்கிக் கொண்டிருக்கிறார் கார்த்திக் நரேன். இதில் அருண் விஜய் ஹீரோவாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடிக்கிறார்கள். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது பிரியா பவானி சங்கர் நடிக்க வேண்டிய காட்சிகள் முடிவடைந்து விட்டது. படப்பிடிப்பு குழுவிடமிருந்து விடைபெற்றுவிட்ட பிரியா பவானி சங்கர் படத்தில் நடித்த அனுபவம் பற்றி தனது இஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மாஃபியா படத்தில் எனது காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மகிழ்ச்சியான, உற்சாகமான, மிக வேகமாக நடந்த படப்பிடிப்பு. கார்த்திக் நரேனின் 3 பவுண்ட் எடை கொண்ட விசேஷ மூளையின் திறன் பற்றி நாங்கள் இன்னும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அருண் விஜய் கனிவு, அர்ப்பணிப்பு, விடா முயற்சி, திறமை, நேர்மறை எண்ணம் எல்லாம் மொத்தம் கொண்ட ஒரு ஆச்சரியமான நபர். எனக்கு எதிர்பாராமல் கிடைத்த நண்பர்.

ஒரு மாதம் விடாமல் படப்பிடிப்பு நடந்தது போலவே எங்களுக்குத் தெரியவில்லை. குழுவில் இருக்கும் அனைவரும் இந்தப் படப்பிடிப்பை மறக்க முடியாததாக, விசேஷமானதாக மாற்றினார்கள். இப்படிப் பல காரணங்களுக்காக மாஃபியா எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமான படமாக இருக்கும். இவ்வாறு பிரியா பவானி சங்கர் எழுதியுள்ளார்.

மூலக்கதை