ஐநா.பாதுகாப்பு கவுன்சில் நாடுகளின் ஆதரவை வென்றது இந்தியா

தினகரன்  தினகரன்
ஐநா.பாதுகாப்பு கவுன்சில் நாடுகளின் ஆதரவை வென்றது இந்தியா

அமெரிக்கா: காஷ்மீரி சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க ஐநா.பாதுகாப்பு கவுன்சில் அளிக்கப்பட்ட புகார் நிராகரிக்கப்பட்டதை அடுத்து இது உள்நாட்டு விவகாரம் தான் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சீனாவை தவிர இதர 14 உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மூடிய அறைக்குள் ரகசியமாக பாகிஸ்தான் கோரிக்கை குறித்து விவாதம் நடத்திய ஐநா.பாதுகாப்பு கவுன்சில் இரு நாடுகளும் சுமுக தீர்வு காணும்படி அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக இப்பிரச்சனையை சீனா எழுப்ப முயற்சித்தது. ஆனால் பாகிஸ்தான், சீனாவின் முயற்சிகள் இந்தியாவால் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கான ஐ.நா தூதர் சையத் அக்பருதின் பாகிஸ்தான் தீவிரவாதத்தை கைவிட்டால் பேசசுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்சனையாக்க நினைத்த பாகிஸ்தானின்  முயற்சியை முறியடித்துள்ள இந்தியா ஐநா.பாதுகாப்பு சபையின் ஆதரவையும் முழுமையாக பெற்றுள்ளது.

மூலக்கதை