வரலாறு, ஆன்மீக மரபுகளால் இரு தேசங்களுக்கும் இடையே ஆழமான பிணைப்பு உருவாகியுள்ளது: பூடானில் ராயல் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
வரலாறு, ஆன்மீக மரபுகளால் இரு தேசங்களுக்கும் இடையே ஆழமான பிணைப்பு உருவாகியுள்ளது: பூடானில் ராயல் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு

திம்பு: பூடானுக்கு வருகை தரும் எவரும் அதன் இயற்கை அழகு மற்றும் மக்களின் எளிய தன்மையால் ஈர்க்கப்பட்டு திகைப்படைவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்ற பின்,  முதல் முறையாக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று பூடான் சென்றார். அங்கு அவரை பரோ சர்வதேச விமான  நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங் வரவேற்றார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து தலைநகர்  திம்புவிற்கு புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக அவர், பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங்கை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங் உடன் இணைந்து மாங்டெச்சு நீர்மின்  நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர் நீர் மின் உற்பத்தி துறையில் இந்தியா - பூடான்  இடையிலான 50 ஆண்டு கால உறவை விளக்கும் வகையில் தபால்தலை வெளியிட்டார். இஸ்‌ரோ அமைத்துள்ள ஆய்வுக் கூடத்தையும் திறந்து  வைத்தார். அதன் பின்னர், விண்வெளி ஆராய்ச்சி, விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தொடர்ந்து, இன்று புத்த மடத்தில் நடக்கும் கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ராயல் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அப்போது, ’வரலாறு, கலாச்சாரம், ஆன்மீக மரபுகளால் நம் இரு  தேசங்களுக்கும் இடையே ஆழமான பிணைப்பு உருவாகியுள்ளது என்றார். பூட்டான் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் உணர்வைப் புரிந்து கொண்டுள்ளது. நேற்று என்னை வரவேற்க வீதிகளில் வரிசையாக நிற்கும் அபிமான  குழந்தைகளிடமிருந்து இந்த ஆவி பரவியது. அவர்களின் புன்னகையை நான் எப்போதும் நினைவில் கொள்வேன் என்றார். உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், இது 500 மில்லியன் இந்தியர்களுக்கு சுகாதார உத்தரவாதத்தை வழங்குகிறது. உலகிலேயே மலிவான தரவு இணைப்பில் இந்தியா உள்ளது, இது மில்லியன் கணக்கானவர்களுக்கு  நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகாரம் அளிக்கிறது. பூட்டானின் சொந்த சிறிய செயற்கைக்கோளை வடிவமைத்தல் மற்றும் ஏவுதல் ஆகியவற்றில் பணியாற்றுவதற்காக பூட்டானிய இளம் விஞ்ஞானிகள் இந்தியாவுக்குச் செல்வது மிகுந்த  மகிழ்ச்சியான விஷயம். ஒரு நாள் விரைவில், உங்களில் பலர் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

மூலக்கதை