குடிநீரில் விஷம் கலந்த நபர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர் : கடலூர் ஆட்சியர் உறுதி
கடலூர் : விருத்தாசலம் டிவி.புத்தூரில் குடிநீரில் விஷம் கலந்த நபர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர் என்றும் குடிநீர் தொட்டி உடனடியாக சுத்தம் செய்யப்படும் என்றும் கடலூர் ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக டிவி.புத்தூரில் விஷம் கலந்த குடிநீரை குடித்த 30 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.