சுதந்திர தினத்தையொட்டி காவல்துறை அதிகாரிகள் 16 பேருக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்க முதல்வர் உத்தரவு
சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி காவல்துறை அதிகாரிகள் 16 பேருக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரயில்வே டி.ஜி.பி சைலேந்திரபாபு, ஏ.டி.எஸ்.பி கந்தசாமி, சென்னை நகர கூடுதல் காவல் ஆணையர் தினகரன், சேலம் ஆய்வாளர் நாகராஜன், தஞ்சை ஆய்வாளர் செந்தில்குமார், சென்னை பெண் தலைமை காவலர் டெய்சி உள்ளிட்டோருக்கு முதல்வர் பதக்கம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.