பாகிஸ்தானில் ேடவிஸ் கோப்பை போட்டி: கைெயழுத்து போட்டாச்சு... இப்ப என்ன பண்றது.....மத்திய அமைச்சர் கைவிரிப்பால் டென்னிஸ் சங்கம் குழப்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தானில் ேடவிஸ் கோப்பை போட்டி: கைெயழுத்து போட்டாச்சு... இப்ப என்ன பண்றது.....மத்திய அமைச்சர் கைவிரிப்பால் டென்னிஸ் சங்கம் குழப்பம்

புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான உறவு நிலவுவதால் செப்டம்பர் 14, 15ல் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற இருக்கும் ஆசியா - ஓசியானா குரூப் 1 டேவிஸ் கோப்பை டை போட்டியில் இந்தியா பங்கேற்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுடனான தூதரக உறவை பாகிஸ்தான் குறைத்துக் கொண்டுள்ளதால், அதன் பாதிப்பு விளையாட்டிலும் உள்ளது.



இதுகுறித்து, மத்திய இளைஞர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுைகயில், “இருதரப்பு போட்டியாக இருந்தால் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது அரசியல் விவகாரம் ஆகியிருக்கும். ஆனால் டேவிஸ் கோப்பை இருதரப்பு போட்டியல்ல; அதனை ஒருங்கிணைப்பது ஒரு சர்வதேச விளையாட்டு அமைப்பு.

ஒலிம்பிக் சாசனத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. எனவே, இந்திய அரசோ, தேசிய சம்மேளனமோ இந்தியா பங்கேற்பதில் தலையிட முடியாது” என்றார்.

ஏற்கனனே, ‘நடுநிலையான ஒரு இடத்தில் போட்டியை நடத்த வேண்டும்’ என அனைத்து இந்திய டென்னிஸ் சங்கம் கோரிக்கை விடுத்தது.

ஆனால், ‘இஸ்லாமாபதில் ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கிவிட்டதால் தற்போது எந்த மாற்றமும் செய்ய இயலாது’ என பாகிஸ்தான் தரப்பு தெறிவித்துள்ளது. இருந்தும், மத்திய அரசு தரப்பில் முறையான அனுமதி கிடைக்காததால், டென்னிஸ் சங்கம் குழப்பத்தில் உள்ளது.

இதற்கிடையே, ‘டேவிஸ் கோப்பை போட்டியில் மகேஷ் பூபதி ஸ்கிப்பராக பங்கேற்பார்’ என்று கடந்த 5ம் தேதி அனைத்து இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்தது.

மேலும், ‘பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி, ரோஹன் போபன்னா, திவிஜ் ஷரன் ஆகியோர் டேவிஸ் கோப்பையில் பங்கேற்பர்; அணியின் பயிற்சியாளராக ஜீஷான் அலி பணியாற்றுவார்’ என்றும் அறிவிக்கப்பட்டது.

1964 முதல் டேவிஸ் கோப்பையில் பங்கேற்கும் பொருட்டு, இந்திய அணி பாகிஸ்தான் சென்றது கிடையாது.

2008 மும்பை தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து எந்த ஒரு விளையாட்டு போட்டியில் பங்கேற்கவும் இந்தியா தரப்பிலிருந்து யாரும் பாகிஸ்தான் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை