அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

கர்நாடகத்தின் குடகு மாவட்டத்திலும், கேரளாவின் வயநாடு பகுதியிலும் தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக மைசூரு அருகே உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும் மற்றும் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக அந்த அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால், அவற்றில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது. இதன் மூலம் 65-வது முறையாக 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 2 லட்சத்து பத்தாயிரம் கன அடியாக உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  அணையை திறந்து வைத்தார்.

மூலக்கதை