கீழடி அகழாய்வில் 2500 ஆண்டுகள் முந்தைய இரும்புத் துண்டுகள் கண்டுபிடிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கீழடியில் நடந்துவரும் 5 -ஆம் கட்ட அகழாய்வில்,  இரும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில், தமிழக அரசு சார்பில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதற்காக தோண்டப்பட்ட குழிகளில் இதுவரை ஏராளமான பழங்காலப் பொருட்கள் கிடைத்துள்ளன. 

தற்போது இரும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்த இரும்புத் துண்டுகள், 2,500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டவை எனத் தெரிய வந்துள்ளது.

மூலக்கதை