திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17 -ந் தேதி அத்திவரதர் குளத்திற்குள் செல்வார் : மாவட்ட ஆட்சியர் தகவல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17 ந் தேதி அத்திவரதர் குளத்திற்குள் செல்வார் : மாவட்ட ஆட்சியர் தகவல்!

திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17 ந் தேதி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்திற்குள் கொண்டு செல்லப்படுவார் என காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சித் தலைவர் பொன்னையா அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திட்டமிட்டபடி ஆகஸ்ட் 16-ந் தேதி இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்படும். அதன் பிறகு ஆகம விதிகளின்படி பூஜைகள் நடத்தப்பட்டு, அத்திவரதரை குளத்திற்குள் கொண்டு செல்லும் பணிகள் நடைபெறும்.
ஆகஸ்ட் 17 -ந்  தேதி மாலையோ அல்லது இரவோ அத்திவரதர் குளத்திற்குள் கொண்டு செல்லப்படுவார். அத்திவரதர் தரிசன நாட்கள் நீட்டிக்கப்பட உள்ளதாக பரவும் தகவல் உண்மையில்லை.

அத்திவரதர் வைபவம் ஆகம விதிப்படி தான் நிறைவடையும். அதில் எந்த மாற்றமும் இல்லை. அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்தபடி, ஆகம விதிப்படி அர்ச்சகர்களால் குளத்திற்குள் கொண்டு செல்லப்படுவார்.

இன்னும் 4 நாட்களே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. மக்களுக்கு தேவையான குடிநீர், அன்னதானம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மக்கள் நீண்ட நேரம் வெயிலில் நிற்பதை தவிர்க்க பந்தல், கார்பெட் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஓய்வு அறைகளும் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 3000 பக்தர்கள் வரை தங்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை