குளோபல் டி20 தொடரில் பாக். பவுலரை கதறவிட்ட கெயில்: ஒரு ஓவரில் 32 ரன்கள் குவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
குளோபல் டி20 தொடரில் பாக். பவுலரை கதறவிட்ட கெயில்: ஒரு ஓவரில் 32 ரன்கள் குவிப்பு

கனடா: கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி20 தொடரில் வான்கவுவர் நைட்ஸ் மற்றும் எட்மொண்டன் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற வான்கூவர் அணியின் கேப்டன் கிறிஸ் கெயில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த எட்மொண்டன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 165 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய வான்கூவர் அணி, ஆரம்பத்திலே ஒரு விக்கெட்டை பறிகொடுத்ததால் நிதானமாக விளையாடிக்கொண்டிருந்தது.

அணியின் கேப்டனாக கிறிஸ் கெயில் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் வீரர் ஷடாப் கான் வீசிய 13வது ஓவரை வெளுத்து வாங்கினார்.

முதல் இரண்டு பந்துகளை சிக்ஸருக்கு விளாசிய அவர், அடுத்த இரண்டு பந்துகளில் பவுண்டரில் விளாசினார். அத்துடன் கடைசி இரண்டு பந்துகளிலும் சிக்ஸர் அடித்து, 6 பந்துகளில் 32 ரன்களைக் குவித்தார்.

மொத்தமாக 44 பந்துகளில் 94 ஓட்டங்கள் எடுத்து கெயில் காட்டிய அதிரடியால், 16. 3 பந்துகளிலே வான்கூவர் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

.

மூலக்கதை