நட்புறவு கால்பந்து போட்டியில் ரசிகர்கள் ஆவேசம் ரொனால்டோ ஏன் விளையாட வரவில்லை?: டிக்கெட் ஏஜென்சி மீது வழக்கு தொடர முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நட்புறவு கால்பந்து போட்டியில் ரசிகர்கள் ஆவேசம் ரொனால்டோ ஏன் விளையாட வரவில்லை?: டிக்கெட் ஏஜென்சி மீது வழக்கு தொடர முடிவு

சியோல்: போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து சூப்பர் ஸ்டாரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றுள்ள ஜூவெண்டஸ் அணியானது, சென்ற வாரம் சியோலில் நட்புறவு போட்டி விளையாடியது. கே லீக் ஆல் ஸ்டார் அணியை எதிர்கொண்ட ஜூவெண்டஸ் அணியின் போட்டியை காண 65,000 பேர் வந்திருந்தனர்.

ஆனால், இந்த போட்டியில் ரொனால்டோ ஒரு நிமிடம் கூட விளையாடவில்லை. இது ரசிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

விரக்தியில் அங்கு கூடி இருந்த சில ரசிகர்கள் ரொனால்டோவிற்கு இணையான போட்டியாளராக கருதப்படும் மற்றொரு சூப்பர் ஸ்டாரான மெஸ்ஸியின் பெயரை கூறி சத்தம் போட்டனர். போட்டி முதலில் அறிவிக்கப்பட்ட போது, இந்த போட்டியை நடத்துபவர்கள், ரொனால்டோ குறைந்தது 45 நிமிடம் விளையாடுவது பொருத்து ஜூவெண்டஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்தது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விலையானது 30,000 வான் (25 அமெரிக்கன் டாலர்) முதல் 4,00,000 வான் (338 டாலர்) வரை விற்பனையானது.

ஜூலை 3ம் தேதி விற்க துவங்கிய டிக்கெட்கள் இரண்டரை மணி நேரத்தில் விற்று தீர்ந்தன. இதனால், கடுப்பான ஸ்போர்ட்ஸ் ஏஜென்சி மீது போட்டியை காண வந்த கால்பந்து ரசிகர்கள் வழக்கு தொடுக்க உள்ளனர். இதுகுறித்து ரசிகர்கள் சார்பிலான வக்கீல்  கிங் ஹுன் கி கூறுைகயில், ‘‘சம்பந்தப்பட்ட ஏஜென்சி, டிக்கெட் வாங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனில் அடுத்த வாரம் வழக்கு தொடுக்க உள்ளோம்’‘ என்றார்.

ஆனால், போட்டியை ஏற்பாடு செய்த கொரியா ஏஜென்சியான தி பெஸ்தாவின் சிஇஓ ராபின் சங் கண்ணீர் மல்க கூறுகையில், ‘‘ரொனால்டோ விளையாடுவார் என நானும் எண்ணினேன். ஆனால் அவர் விளையாட விருப்பமில்லை என கூறிவிட்டார்.

எனவே எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை’’ என்றார்.

.

மூலக்கதை