கால்பந்து வீரர் நெய்மருக்கு எதிரான பலாத்கார புகாரில் உண்மையில்லை: ேபாலீஸ் அறிக்கையில் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கால்பந்து வீரர் நெய்மருக்கு எதிரான பலாத்கார புகாரில் உண்மையில்லை: ேபாலீஸ் அறிக்கையில் தகவல்

சாவ்பாவ்லோ:  பாரிஸ் செயின்ட் ஜெர்மன் கால்பந்து கிளப் அணியில் ஆடி வரும் நெய்மர், உலகிலேயே மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். சமீபகாலமாக காயத்தால் விளையாடவில்லை.

இந்நிலையில் பாரிஸ் நகர ஓட்டல் ஒன்றில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நெய்மர் மீது இளம்பெண் புகார் செய்துள்ளார். பிரேசிலை சேர்ந்த அந்த பெண், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆகி நட்பை வளர்த்துள்ளார்.

கடந்த மே மாத மத்தியில் பாரிஸ் வருமாறு அந்த பெண்ணை நெய்மர் அழைத்தாராம்.

அதன்படி சென்ற அப்பெண்ணை ஓட்டல் அறையில் பலாத்காரம் செய்தார் என சாவ்பாவ்லோ நகர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

நெய்மருக்கு எதிராக எழுந்த பாலியல் புகார், உலகம் முழுவதும்  உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நெய்மருக்கு எதிரான குற்றச்சாட்டை பிரேசில் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், நெய்மருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை கைவிடுவதாக போலீசார் அட்டார்னி ஜெனரலுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.   துவக்கத்தில் இருந்தே நெய்மர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை