சோயிப் மாலிக் - சானியா மிஸ்ராவை போன்று இந்திய ெபண்ணுடன் பாக். பவுலருக்கு ‘டும்டும்’: ஆகஸ்ட் 15, 16ல் துபாயில் ஏற்பாடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சோயிப் மாலிக்  சானியா மிஸ்ராவை போன்று இந்திய ெபண்ணுடன் பாக். பவுலருக்கு ‘டும்டும்’: ஆகஸ்ட் 15, 16ல் துபாயில் ஏற்பாடு

லாகூர்:  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனையான  சானியா மிர்சாவை ஏப்ரல் 12, 2010ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.   இவர்களுக்கு அக்டோபர் 30, 2018ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக்  குழந்தைக்கு இஸான் மிர்சா மாலிக் என்று பெயரிட்டனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி, இந்திய பெண்ணை மணக்கவிருப்பதாக ஐஏஎன்எஸ் ஜியோ செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி, பாகிஸ்தான் பவுலர் ஹசன் அலி, இந்திய ெபண்ணான ஷாமியா அர்சூவை மணக்கவுள்ளார்.

இவர்கள் இருவரின் திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி துபாயில் நடக்கவுள்ளது.

ஷாமியா, அரியானாவில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

அவர் இங்கிலாந்தில் பொறியியல் படித்துவிட்டு இப்போது துபாயில் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.   குடும்பத்தினர் சிலர் டெல்லியிலும் உள்ளதாக கூறப்படுகிறது. ஹசன், இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளிலும் 53 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.

2017ம் ஆண்டு சேம்பியன்ஸ் ட்ராபியில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், கடந்த சில வருடங்களில் அவரின் செயல்பாடு சரிந்துள்ளது.

26 வயதான இவர், உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட முயன்றும் தோற்றதால், ஆடும் லெவனில் இருந்து பாதி தொடரில் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, ஷாமியா அர்சூவின் மூத்த சகோதரர் அக்பர் அலி கூறுகையில், ‘‘ஆமாம்! எனது சகோதரி ஷாமியாவுக்கும், பாகிஸ்தான் வீரர் ஹசன் அலிக்கும் துபாயில் ஆகஸ்ட் 15-16ம் தேதிகளில் நிஹ்கா நடைபெறுகிறது.

இருதரப்பு பெற்றோர்களும் துபாயில் சந்தித்து பேசி திருமணத்தை முடிவு செய்தனர்’’ என்றார்.

.

மூலக்கதை