மின்னல் தாக்கி உ.பி.யில் 9 பேர் பலி

தினகரன்  தினகரன்
மின்னல் தாக்கி உ.பி.யில் 9 பேர் பலி

பண்டா: உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 9 பேர் பலியாயினர். உத்தரப் பிரதேசத்தில் பருவமழை பெய்து வருகிறது. இங்குள்ள பண்டா, சித்ரகூட், ஹமிர்பூர், ஜலுவான் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மின்னல் தாக்கியதில்  பண்டா மற்றும் சித்ரகூட் மாவட்டத்தில் ஒருவரும், ஹமிர்பூர் மாவட்டத்தில் 3 பேரும், ஜலுவான் மாவட்டத்தில் 4 பேரும் பலியாயினர்.

மூலக்கதை