கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு கனமழை ரெட் அலர்ட்

தினகரன்  தினகரன்
கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு கனமழை ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில்  கனமழை நேற்றும் நீடித்தது. இதையடுத்து  நாளில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக  உயர்ந்துள்ளது.  3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்  விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் கடந்த 3 நாட்களுக்கும்  மேலாக  பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக  காசர்கோடு, இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து  வருகிறது. நாளை வரை காசர்கோடு, வயநாடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த  நாட்களில் மழைக்கு பலியானோர்  எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக  கேரளா முழுவதும் 7 மாவட்டங்களில் வெள்ள நிவாரண முகாம்கள்  திறக்கப்பட்டுள்ளன. இதில் 165 குடும்பங்களை சேர்ந்த 835 தங்க  வைக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை