பஸ் நிழற்குடை மாயம்: பொதுமக்கள் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
பஸ் நிழற்குடை மாயம்: பொதுமக்கள் அதிர்ச்சி

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதன் அருகே தனியார் பொறியியல் கல்லூரி, பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களின் வசதிக்காக, அரசு சார்பில் சென்னை - பெங்களூரு தேசிய நெஞ்சாலையில் பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர், பொக்லைன் இயந்திரம் மூலம் இந்த நிழற்குடையை அகற்றினர். இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மக்கள் பயன்படுத்தி வந்த நிழற்குடையை இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது.  இதனால் இனி அரசு பஸ்கள் இங்கு நின்று செல்லுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, அரசு அதிகாரிகளும், போக்குவரத்து நிர்வாகமும் இதுகுறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

மூலக்கதை