யாழில் மீண்டும் பாதுகாப்பு தீவிரம்
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது. இதனால் யாழ்ப்பாணம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மானிப்பாய் – இணுவில் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொடிகாமம், கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞன் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் இளைஞனின் சடலம் ஒப்படைக்கப்பட்டு உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது. மேலும்... The post யாழில் மீண்டும் பாதுகாப்பு தீவிரம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.