சிவகார்த்தியகேயனுக்கு வில்லன் இந்தி நடிகர்

தினமலர்  தினமலர்
சிவகார்த்தியகேயனுக்கு வில்லன் இந்தி நடிகர்

தமிழ் படங்களில் இந்தி நடிகர்களை வில்லனாக நடிக்க வைக்கும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரஜினி நடித்த 2.0 படத்தில், நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்தார். நயன் தாரா நடிப்பில் உருவான இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்தார். அஜித் நடிப்பில் உருவான விவேகம் படத்தில் விவேக் ஓபராய் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பிலும், இரும்புத் திரை படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ படத்திலும், பிரபல இந்தி நடிகர் ஒருவர் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்தி நடிகர் அபய்தியோல், வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார் என, படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

கடந்த மார்ச்சில் துவங்கிய படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். இவர்கள் தவிர, அர்ஜுன், இவானா, விவேக், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்தி நடிகர் ஒருவர் படத்தில் வில்லனாகி விட்டதால், நடிகர் அர்ஜுனுக்கு படத்தில் என்ன ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற பரபரப்பான கேள்வி எழுந்துள்ளது.

மூலக்கதை