அபய் தியோல், சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆனது எப்படி? மித்ரன் விளக்கம்

தினமலர்  தினமலர்
அபய் தியோல், சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆனது எப்படி? மித்ரன் விளக்கம்

விஷால் நடித்த இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்து இயக்கும் படம் ஹீரோ. இதில் சிவகார்த்திகேயனுடன் இவானா, கல்யாணி பிரியதர்ஷன் உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அபய் தியோல் வில்லனாக நடிக்கிறார். இதுகுறித்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் கூறியதாவது:

எனது முதல் படமான இரும்புதிரையில் ஹீரோ விஷாலுக்கு நிகராக வில்லன் அர்ஜுன் கேரக்டரும் பேசப்பட்டது. அதேபோல இந்தப் படத்தின் வில்லனும் ஹீரோவுக்கு நிகரானவர். அதோடு முகத்தில் சிரிப்பை வைத்துக் கொண்டு கொடூர வில்லத்தனம் செய்கிற கேரக்டர்.

பார்க்க நல்ல மனிதராக தெரிய வேண்டும். ஆனால் இன்னொரு முகத்தை காட்டும்போது டெரராக இருக்க வேண்டும். இந்த கேரக்டருக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று யோசித்தபோதுதான் இப்படியான பல கேரக்டரில் அபய் தியோல் நடித்திருப்பது நினைவுக்கு வந்தது. அவருக்கு கதை சொன்னோம். பிடித்து விட்டதால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். என்றார்.

மூலக்கதை