பயங்கரவாதிகள் தாக்குதல் பாகிஸ்தானில் 7 பேர் பலி

தினமலர்  தினமலர்
பயங்கரவாதிகள் தாக்குதல் பாகிஸ்தானில் 7 பேர் பலி

பெஷாவர்:பாகிஸ்தானில் நேற்று, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், நான்கு போலீசார் உட்பட, ஏழு பேர் பலியாகினர்.
அண்டை நாடான பாகிஸ்தானின், வட மேற்கில் அமைந்துள்ள, ஹைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ளது, தேரா இஸ்மாயில் கான் மாவட்டம். இங்குள்ள, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, நேற்று காலை, 'புர்கா' உடை அணிந்த பெண் வந்தார்.தன் உடலில் கட்டியிருந்த, சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதலில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருந்த பொதுமக்களில் மூன்று பேர், பாதுகாப்பு பணியில் இருந்த, இரண்டு போலீஸ்காரர்கள் உயிர்இழந்தனர்.இதற்கிடையில், அதே பகுதியில், கொட்லா சைடன் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் இருந்த, போலீசார் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்; இதில், இரண்டு போலீசார் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல்களுக்கு, 'தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான்' என்ற, பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இந்த இரண்டு தாக்குதல்களிலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்; அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மூலக்கதை