‛சாஹோ' வெளியீடு தள்ளி வைப்பு

தினமலர்  தினமலர்
‛சாஹோ வெளியீடு தள்ளி வைப்பு

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் பிரமாண்ட படம் சாஹோ. இது ஜேம்ஸ்பாண்ட் படங்களின் பாணியில் சுமார் ரூ.200 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

பிரபாசுடன், ஸ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சங்கி பாண்டே, மகேஷ் மஞ்ச்ரேகர், அருண் விஜய், முரளி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர். 2017ல் துவங்கப்பட்ட இந்த படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு, தற்போது ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மிக பிரமாண்டமான அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளையும், இதற்கு முன் பார்த்திராத கதைக்களத்தை மிகப்பெரிய அளவில் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்ய தயாராக இல்லை. நாங்கள் சிறந்ததை பார்வையாளர்களுக்கு கொடுக்க விரும்புகிறோம். சண்டைக் காட்சிகளில் நேர்த்தியைக் கொண்டு வருவதற்கு நமக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படுகிறது. மிகப்பெரிய திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு வருவதற்கு நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை