அருணாசலத்தில் 3 நிலநடுக்கம்

தினகரன்  தினகரன்
அருணாசலத்தில் 3 நிலநடுக்கம்

கவுகாத்தி: அருணாசலப் பிரதேசத்தில் நேற்று பிற்பகல் 2.52 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.   காமேங் மாவட்டத்தில் 10 கிமீ ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இது இடாநகர், கவுகாத்தி, அசாமின் ஒரு சில பகுதிகள், நாகலாந்தின் திமாபூர் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது.  இதை தொடர்ந்து 3.04 மணிக்கு 3.8 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலஅதிர்வு ஏற்பட்டது.  தொடர்ந்து 3.21 மணிக்கு மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.9 புள்ளிகளாக பதிவானது.  இந்த நிலநடுக்கதால், ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த உடனடி தகவல் இல்லை.

மூலக்கதை