பீகார் கிராமத்தில் அட்டூழியம் மாடு திருடியதாக 3 பேர் கொலை

தினகரன்  தினகரன்
பீகார் கிராமத்தில் அட்டூழியம் மாடு திருடியதாக 3 பேர் கொலை

சாப்ரா: பீகாரில் மாடுகளை திருடியதாக சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட 3 பேரை ஒரு கும்பல் அடித்து கொன்றது. பீகார் மாநிலம், சாரான் மாவட்டத்தில் உள்ள பாய்காம்பர்பூர் கிராமத்தில் நேற்று அதிகாலை மாடுகளை திருடியதாக சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் 3 பேரை பிடித்தனர். அவர்களை கிராம மக்கள் கும்பலாக சேர்ந்து கடுமையாக அடித்து உதைத்தனர். இதில், இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்கள், ராஜூ நாத், பைட்ஸ் நாத் மற்றும் நவுஷாத் குரேஷி என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை