வாடகை ஒப்பந்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
வாடகை ஒப்பந்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: வீட்டு உரிமையாளருடன், வாடகை வீட்டில் குடியிருப்போர் மேற்கொள்ளும் வாடகை ஒப்பந்தத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பதற்கான சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது..சட்டப்பேரவையில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஒரு மசோதா தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது: சொத்து உரிமையாளரும் வாடகைதாரரும் வாடகை ஒப்பந்தங்களை எழுத்துப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும்  என்று சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது, அதற்கான கால அவகாசம் 90 நாட்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது, தற்போது அதற்கான கால அவகாசம் 90 நாட்களில் இருந்து 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சொத்து  உரிமையாளர்களும், வாடகைதாரர்களும் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மூலக்கதை