தமிழகத்தில் 2 விபத்துகளில் 15 பேர் பலி

தினமலர்  தினமலர்
தமிழகத்தில் 2 விபத்துகளில் 15 பேர் பலி

திருநெல்வேலி: தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி அருகே நடந்த இரு விபத்துகளில் 15 பேர் பலியாயினர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

9 பேர் பலி:


கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேரில் தனியார் பஸ் - வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலை 3 மணிக்கு நடந்த இவ்விபத்தில், சென்னையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற காரில் பயணித்த 7 பேரும், பஸ்சில் பயணித்த 2 பேரும் பலியாயினர். ஆம்னி பஸ் டிரைவர், ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 8 பேர் உட்பட 9 பேர் பலியாயினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேன் கவிழ்ந்து 6 பேர் பலி :


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த திருத்தங்கல் கிராமத்திலிருந்து பயணிகள் வேன் ஒன்று திருச்செந்தூர் நோக்கி சென்றது. வேன் இன்று (ஜூலை 18) அதிகாலை 1.30 மணியளவில் திருநெல்வேலி - திருச்செந்தூர் ரோட்டில் கருங்குளம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 6 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்தில் பலியானவர்கள்: ஜெகதீஸ்வரன், அருணாசலம், முத்துலட்சுமி, பாக்யலட்சுமி, நித்தீஷ், அனீஸ்பாண்டி (குழந்தை). விபத்தில் பலியானவர்கள் திருத்தங்கல் இந்திராநகர் பாண்டியன் நகர் 6வது தெருவை சேர்ந்தவர்கள் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., அருண்பாலகோபாலன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புபணியில் ஈடுபட்டார்

மூலக்கதை