மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பிறகு கனமழை பெய்ய வாய்ப்பு

தினகரன்  தினகரன்
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பிறகு கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பிறகு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். தேனி, நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மேலும் சென்னை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை