ஆந்திர அரசு பஸ்சில் கஞ்சா கடத்தல்: பெண் உள்பட 9 பேர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆந்திர அரசு பஸ்சில் கஞ்சா கடத்தல்: பெண் உள்பட 9 பேர் கைது

திருமலை: திருப்பதிக்கு வந்த ஆந்திர அரசு பஸ்சில் கஞ்சா பொட்டலம் கடத்திவந்த பெண் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடாவில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசு பஸ் புறப்பட்டது.

இந்த பஸ், பிரகாசம் மாவட்டம் மருதூர் மண்டலம், போலபள்ளி சோதனைச்சாவடி அருகே இன்று அதிகாலை வந்தபோது  கலால்துறை போலீசார் அந்த பஸ்சில் சோதனை செய்தனர். அப்போது அந்த பஸ்சில் பெரிய, பெரிய பைகளுடன் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 9 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.



உடனடியாக அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது அந்த பைகளில் 80 கிலோ கஞ்சாவை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பெண் உள்பட 9 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், இவர்கள் கஞ்சாவை எங்கிருந்து வாங்கினார்கள், இதை எங்கு எடுத்துச்சென்ற  விற்பனை செய்கிறார்கள், இவர்களுக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.

மூலக்கதை