ஜவுளி கடைக்குள் புகுந்து கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு வெட்டு
சேலம்: ஜவுளி கடைக்குள் புகுந்து கம்யூனிஸ்ட் பிரமுகரை சரமாரி வெட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகேயுள்ள பெரியசோரகையை சேர்ந்தவர் ஜீவானந்தம்.
இவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார்.
இவரது தம்பி வேலுதங்கமணி(33). இவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார்.
இவர் நங்கவள்ளியில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு 8. 30 மணி அளவில் அவரது கடைக்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென அரிவாளால் வேலுதங்கமணியை சரமாரி வெட்டினர்.
இதனால் ஜவுளிக்கடையில் வேலை பார்த்த பெண் ஊழியர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார். உடனடியாக வேலுதங்கமணியை மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் நங்கவள்ளி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். இதில் 2 வாலிபர்களின் படம் பதிவாகி இருந்தது.
அதில் ஒருவர் நங்கவள்ளியை சேர்ந்த சதீஷ் (28) என்பது ெதரிந்துள்ளது. இவர் மேச்சேரியில் உள்ள சிஸ்காலில் வேலை செய்து வருகிறார்.
மனைவி, ஒரு குழந்தை இருக்கிறது. இன்னொரு வாலிபரின் முகம் சரியாக தெரியவில்லை.
இதையடுத்து சதீஷை போலீசார் தேடி வருகின்றனர்.
.