மது அருந்துவதால் சராசரி ஆயுள் 75 நாட்கள் குறையும்: சர்வதேச மருந்துக் கொள்கை இதழ் அறிக்கை வெளியீடு

தினகரன்  தினகரன்
மது அருந்துவதால் சராசரி ஆயுள் 75 நாட்கள் குறையும்: சர்வதேச மருந்துக் கொள்கை இதழ் அறிக்கை வெளியீடு

புதுடெல்லி: மது அருந்துவதால் 2050ம் வாக்கில் இந்தியாவில் தனிநபர் வாழ்நாள் சராசரியாக 75 நாட்கள் குறையும் என்று ஆய்வில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்திய மருத்துவர்கள் 3 பேர் மற்றும் சுகாதார ஆராய்ச்சியாளர்கள் இரண்டு பேர் இணைந்து 2011 முதல் 2050 வரை இந்தியாவின் மதுவின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார்கள். இதை தொடர்ந்து அந்த ஆய்வறிக்கையை சர்வதேச மருந்துக் கொள்கை இதழானது வெளியிட்டிருக்கிறது. மேலும் அதன்படி மதுப்பழக்கத்தால் சராசரி வாழ்நாள் சராசரியாக 75 நாட்கள் அதாவது இரண்டரை மாதங்கள் குறைவதாகவும் மது தொடர்பான சிகிச்சை மறுவாழ்வு செலவில் பொருளாதார வளர்ச்சியில் ஆண்டிற்கு 1.45 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மது பழக்கத்தால் சந்திக்கும் உடல்நல பாதிப்புகளில் இருந்து மீள 5.7 கோடி இந்தியர்களுக்கு அவசர உதவி தேவைபடுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மதுப்பழக்கத்தால் ஏற்படும் பணிப்பதிப்பு, உற்பத்தி இழப்பு மற்றும் உயிரிழப்புகளால் 2050ம் ஆண்டிற்குள் இந்தியாவிற்கு 97 லட்சம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்படும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மதுவிலக்கு மற்றும் சரியான சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டால் இதே காலகட்டங்களில் பாதியளவு இழப்பை தவிர்க்க முடியும் என்றும் அதில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

மூலக்கதை