மதுரையில் கூடுதல் விமானங்கள் இயக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
மதுரை : மதுரையில் இருந்து சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த விஜயகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த இந்த பொதுநல வழக்கில் தற்போது இயக்கப்படும் விமானங்கள் எவ்வளவு? புதிதாக தேவைப்படும் விமானங்கள் எவ்வளவு என்பதை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனுதாரரே காலா ஆய்வு செய்து உரிய ஆதாரங்களுடன் புதிய பொதுநல மனுவை தாக்கல் செய்ய ஐகோர்ட் அறிவுறுத்தியது.