பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை: திமுக எம்.பி. ஆ.ராசா குற்றச்சாட்டு
டெல்லி: பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என திமுக எம்.பி. ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய தனிச் சட்டம் உயற்ற வேண்டும் என திமுக எம்.பி. ஆ.ராசா கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் எந்த திட்டம் என்றாலும் கமிஷன், வசூல், ஊழல் என்றே காணப்படுவதாக ஆ.ராசா கூறியுள்ளார்.