சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஐகோர்ட் அனுமதி
சென்னை : சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடல்நிலை மோசமானதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்குமாறு ராஜகோபால் மகன் தாக்கல் செய்த மனுவை ஏற்று போலீஸ் பாதுகாப்புடன் சிறை விதிகளுக்கு உட்பட்டு தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலனை சேர்க்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது