இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்பதற்காக 140 பேர் அடங்கிய தமிழக மீனவர்கள் குழு நாளை அல்லது நாளை மறுநாள் இலங்கை செல்ல இருப்பதாக

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்பதற்காக 140 பேர் அடங்கிய தமிழக மீனவர்கள் குழு நாளை அல்லது நாளை மறுநாள் இலங்கை செல்ல இருப்பதாக

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்பதற்காக 140 பேர் அடங்கிய தமிழக மீனவர்கள் குழு நாளை அல்லது நாளை மறுநாள் இலங்கை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை செல்வதற்கான அனுமதிக்கடிதமானது, இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், கோட்டைப்பட்டிணம், மண்டபம், ஜெகதாப்பட்டிணம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20 படகுகளின் மூலம், மீனவர்கள் இலங்கைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 20 பேரும் இலங்கை செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. சர்வதேச கடல் எல்லைக்கு முன்னதாகவே, இந்திய கடற்படையினரால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பின்னர் இலங்கை கடற்படையிடம் ஓப்படைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 80க்கும் அதிகமான படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை