ராணுவ தளவாட மையத்தில் குண்டு வெடித்து 6 பேர் பலி

தினகரன்  தினகரன்
ராணுவ தளவாட மையத்தில் குண்டு வெடித்து 6 பேர் பலி

வர்தா : மகாராஷ்டிரா மாநிலம், வர்தா மாவட்டத்தில் புல்கான் நகரில் ராணுவ தளவாட மையம் அமைந்துள்ளது. இங்கு ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று காலை வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். வெடிப்பொருட்கள் அடங்கிய பெட்டியை ஒப்பந்த தொழிலாளர்கள் வாகனத்தில் இருந்து இறக்கி கொண்டு இருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஒரு பெட்டியில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதில், பணியில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே சிதறி உயிரிழந்தனர். மேலும், 10 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 2016ம் ஆண்டு இதே ராணுவ தளவாட மையத்தில் நடந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை