முதல்வர் எடப்பாடி அவசர அவசரமாக டெல்லி செல்வது ஏன்? டி.டி.வி. தினகரன் கேள்வி
சென்னை: முதல்வர் எடப்பாடி அவசர அவசரமாக டெல்லி செல்வது ஏன் என டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடாமல் முதல்வர் டெல்லி செல்வது வீண் என கூறியுள்ளார். தனிப்பட்ட அரசியல் காரணத்திற்காக எடப்பாடி டெல்லி செல்வதாக சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்தார்.