ஆப்கானிஸ்தான் விழா: தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் பலி

தினமலர்  தினமலர்
ஆப்கானிஸ்தான் விழா: தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் பலி

காபூல்:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மண்டபம் ஒன்றில் மீலாது நபி கொண்டாட்டத்தில் மத குருமார்கள் நடந்து கொண்டு இருந்தது. அப்போது நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 50 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.
மேலும் குறைந்தது 60 பேர் காயமடைந்திருக்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி வாஹித் மஜ்ரோ தெரிவித்துள்ளார். மத குருமார்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் தாக்குதல் நடந்தது என காபூல் போலீஸ் அதிகாரி பஷீர் முஜாகித் கூறியுள்ளார். இதுவரை எந்த தீவிரவாத குழுக்களும் தாக்குதலை தாங்கள் நடத்தியதாக ஒப்புக்கொள்ளவில்லை. போலீஸ், ராணுவத்தினர் விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை