மகாராஷ்டிராவில் பயங்கரம்: ராணுவ ஆயுத கிடங்கில் வெடி விபத்து: 6 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகாராஷ்டிராவில் பயங்கரம்: ராணுவ ஆயுத கிடங்கில் வெடி விபத்து: 6 பேர் பலி

வார்தா: மகாராஷ்டிராவில் உள்ள ராணுவ ஆயுத கிடங்கில் நடந்த வெடி விபத்தில், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம், வார்தா பகுதியில் ராணுவ தளவாட ஆயுத கிடங்கு உள்ளது. இங்கு இன்று காலை திடீரென பயங்கர சத்தம் கேட்டது.

கிடங்கில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறின. அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த  ஊழியர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



18 பேர் காயம்  அடைந்த நிலையில், உடனடியாக அவர்கள் அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வெடிபொருட்கள் பயங்கரமாக வெடித்து சிதறியதால் நீண்ட நேரமாக ஆயுத கிடங்கு அருகே செல்ல முடியவில்லை.

வெடி விபத்தால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.

மின்கசிவால் இந்த விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராணுவ கிடங்கில் இருந்த பழைய வெடிபொருட்களை செயலிழக்க செய்வதற்காக, அவைகளை வேறு இடத்துக்கு மாற்றும் பணி நடந்தபோது வெடிபொருட்கள் வெடித்து சிதறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

.

மூலக்கதை