ஆஸ்திரேலியாவில் டி-20 நாளை தொடக்கம் சாதிக்குமா இந்திய அணி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலியாவில் டி20 நாளை தொடக்கம் சாதிக்குமா இந்திய அணி

பிரிஸ்பேன்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான டி-20 போட்டிகள் நாளை தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

டி-20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நாளை தொடங்குகிறது. 23, 25ம் தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் நடக்கின்றன.

டி-20 போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணி வலுவாகவே உள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதிய 3 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றிபெற்றது.

இதேபோல் ஆஸ்திரேலிய அணியுடன் நாளை துவங்கும் தொடரையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து துணை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘‘ஆஸ்திரேலியா ஆடுகளம் வேகப்பந்துக்கு சாதகமானது. பிரிஸ்பேனில் விளையாடும் போதெல்லாம் நமக்கு மிகப்பெரிய சவாலாக தான் இருந்திருக்கிறது.

இந்த தொடரில் இதை மாற்ற முயற்சித்து வருகிறோம். ஆஸ்திரேலியாவில் ஒருநாள், டி-20 போட்டிகளில் என்னால் சிறப்பாக விளையாட முடியும்.

பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால், வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். ஏனென்றால், இந்தியாவில் சிமென்ட் ஆடுகளத்தில் விளையாடி பயிற்சி பெற்றேன்’’ என்றார்.

தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வரும் ரோகித் சர்மா, டி-20 போட்டியில் 4 சதங்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை