காஷ்மீரில் பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீரில் பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டம், நதிகம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். இன்று காலை தீவிரவாதிகளை சுற்றிவளைத்த நிலையில், வீரர்களை நோக்கி அவர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.


இரு தரப்பினர் இடையே கடும் சண்டை நடந்த நிலையில், 4 வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து நவீனரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள், தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த சண்டையில் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்த நிலையில், 3 வீரர்கள் காயம் அடைந்தனர். இன்னும் சில தீவிரவாதிகள் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால், அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் சமீபகாலமாக தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

.

மூலக்கதை