அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு

சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் போலீஸ் அதிகாரி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

சிகாகோ நகரில் உள்ள மெர்சி மருத்துவமனையில், மருத்துவமனையின் வாசல் அருகே பதுங்கியிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். இதில், பெண் டாக்டர் ஒருவர் பலியானார். அருகில் இருந்த மற்றொரு பெண் ஒருவர் காயமடைந்தார். இதனையறிந்த போலீசார் அந்த மருத்துவமனையை சுற்றி வளைத்து அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அந்த நபர் சுட்டதில், சாமுவேல் என்ற போலீஸ் அதிகாரியும், மருத்துவமனை ஊழியர் ஒருவரும் பலியானார்கள். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் இறந்து போனார். இவர் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தாரா அல்லது தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. இறந்த பெண் டாக்டர், மர்ம நபரின் முன்னாள் காதலி எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் மருத்துவமனையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அனைத்து நோயாளிகளும் பாதுகாப்பாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை