ஆந்திராவில் ரயில் தண்டவாளத்தில் சிக்கி சிறு காயங்கள் கூட இல்லாமல் உயிருடன் தப்பிய ரயில் பயணி

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் ரயில் தண்டவாளத்தில் சிக்கி சிறு காயங்கள் கூட இல்லாமல் உயிருடன் தப்பிய ரயில் பயணி

ஆந்திரா: ஆந்திராவில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது தண்டவாளத்தின் நடுவே சிக்கியவர் உயிருடன் தப்பிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திர பிரதேசம் அனந்தபூர் ரயில் நிலையத்திற்கு லக்னோ - எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பயணி ஒருவர் அடுத்த நடைமேடைக்கு செல்வதற்கு மேம்பாலம் மூலம் செல்லாமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவர் செல்லும் பாதையில் ஏற்கனவே நின்று கொண்டிருந்த ரயிலை கண்டுகொள்ளாத பயணி ரயில் தண்டவாளத்தில் இறங்கி பாதையை கடக்க முயன்றார். சிறிது நேரத்தில் புறப்பட தயாராக இருந்த அந்த ரயில் திடீரென நகர்ந்தது. சுதாரித்து கொண்ட அந்த நபர் தண்டவாளங்களுக்கு நடுவே படுத்து கொண்டார். அப்போது ரயில் கடந்து செல்லும் வரை சில நிமிடங்கள் அந்த நபர் ரயிலின் அடியிலேயே படுத்துக்கொண்டார். பின்னர் ரயில் சென்ற பின் சிறு காயங்கள் கூட இல்லாமல் எழுந்து புறப்பட்டு சென்றார். இதைப்பார்த்த அங்கிருந்த சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் உலாவ விட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது.

மூலக்கதை