கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு சரத்குமார் வலியுறுத்தல்
சென்னை: கஜா புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பகுதியாக அறிவித்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு சரத்குமார் நேற்று இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.