லாலு பிரசாத் உடல்நிலை மோசமானது

தமிழ் முரசு  தமிழ் முரசு
லாலு பிரசாத் உடல்நிலை மோசமானது

ராஞ்சி: பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான லாலு பிராசத் பீகார் மாநில முதல்வராக இருந்த போது மாட்டு தீவன ஊழல் நடந்தது.

இவ்வழக்கில் தண்டனை பெற்ற லாலு, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலை அவ்வப்பொழு பாதிப்படைந்து வந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சைக்காக லாலுவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில்வே ஊழல் வழக்கில் இன்று லாலு ஆஜராக வேண்டிய நிலையில், அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது ராஞ்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து லாலுவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் உமேஷ் பிரசாத் கூறுகையில், ‘‘கடந்த சில  நாட்களாக லாலுவுக்கு சர்க்கரை, ரத்த அழுத்த அளவு திடீரென அதிகரித்துள்ளது. சர்க்கரை அளவு குறையவில்லை.

வலது காலில் சர்க்கரை அதிகரிப்பால் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.

உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.

.

மூலக்கதை