புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
சென்னை: கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார். இதையடுத்து பாதிக்கபட்டவர்களுக்கு மத்திய அரசும், நாட்டு மக்களும் துணை நிற்பார்கள் என அவர் கூறியுள்ளார். மேலும் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்தார்.