ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டம் இன்று நடைபெறும்: ரிசர்வ் வங்கி

தினகரன்  தினகரன்
ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டம் இன்று நடைபெறும்: ரிசர்வ் வங்கி

டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற முறைகேடுகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்கத் தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ரிசரிவ் வங்கியில் சேமிப்பாக உள்ள பணத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக பணத்தை மத்திய அரசு கேட்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பணிப் போர் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்ய உர்ஜித் படேல் முடிவு செய்துள்ளதாகவும், பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசிய பின் தன் முடிவை மாற்றிக்கொண்டதாக தகவல்கள் வெளியானியுள்ளன.இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் இயக்குநர்களின் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதிகள் எளிமைப்படுத்துவது, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான கருத்து வேறுப்பாட்டை தீர்ப்பது போன்ற அம்சங்கள் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் தலையிடும் முடிவை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்தும் 7வது சட்டப் பிரிவையும் கைவிட்டுவிட மத்திய அரசு முடிவுவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

மூலக்கதை