16 வயது சிறுவன் வெறிச்செயல் அமெரிக்காவில் 61 வயது இந்தியர் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
16 வயது சிறுவன் வெறிச்செயல் அமெரிக்காவில் 61 வயது இந்தியர் சுட்டுக்கொலை

நியூயார்க் : அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள வென்ட்னர் பகுதியில் வசித்து வந்தவர் சுனில் எட்லா (61). இந்தியாவை சேர்ந்த இவர் அட்லாண்டிக் மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 15ம் தேதி இரவு எட்லா வழக்கம்போல் பணிக்கு சென்றதாக தெரிகிறது. காரை ஸ்டார்ட் செய்த எட்லா பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்ேபாது இரண்டாவது தளத்தில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், அவருடைய காரும் மாயமானது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எட்லாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக வென்ட்னர் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். காணாமல் போன எட்லாவின் கார், அட்லாண்டிக் மாவட்டத்தில் உள்ள வேறு ஒரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. மேலும், அவரை கொலை செய்த 16 வயது சிறுவனையும்,  கடந்த 16ம் தேதி காலை போலீசார் கைது செய்தனர். சிறுவன் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எட்லா வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில், சிறுவன் பைக்கில் வந்து எட்லாவுக்காக காத்திருக்கிறான். எட்லா வீட்டில் இருந்து வெளியே வரும் வரை சிறுவன் காத்திருக்கும் காட்சிகளும் பதிவாகி உள்ளது. கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மூலக்கதை