உத்தரகண்டில் 150-மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி

தினகரன்  தினகரன்
உத்தரகண்டில் 150மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி

உத்தரகாண்ட்: உத்தரகண்டில் உத்தரகாசி-யமுனோத்ரி நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து திடீரென 150-மீட்டர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் உள்ள ஜான்கிசாட்டி பகுதியில் இருந்து விகாஸ் நகர் பகுதியை நோக்கி சென்ற போது தம்டா பகுதியில் வந்தபோது அருகில் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். டேராடூனில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பஸ் பள்ளத்தாக்கில் இறங்கிய பிறகு சில மீட்டர் தொலைவில் ஆற்றில் விழுந்ததால் உயிரிழப்புகள் உயர்ந்துவிட்டன என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து அறிந்த மாநில முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத், மீட்புப் பணிகளை முடுக்கி விடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை